மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர்களின் சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்னை காரணமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்குமான மோதல் அதிகரித்து வருகிறது. முன்பணம் வாங்கிக் கொண்டு தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் 16ம் தேதி முதல் புதிய படங்கள் தொடங்கப்படாது என்றும், நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து முழு வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகவும் திரைப்பட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம், தனுஷ் மீது இதுவரை எந்த புகாரும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. அதோடு தன்னிச்சையாக முடிவெடுப்பதா என்றும் கேட்டிருந்தது.
இந்த நிலையில் தயாரிப்பளார் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தனுஷ் மீது எந்த புகாரும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே தயாரிப்பாளர் சங்க பொதுகுழுவில் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் 5 நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் நடிகர் சங்கம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் சங்க உறுப்பினர்கள் நலன் காக்க நாங்களும் சில முடிவுகள் எடுக்க வேண்டியது வந்தது. நடிகர் சங்கம் தங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதை போலத்தான் எங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க ஏற்கனவே அறிவித்த நவ., 1 முதல் சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளோம். இதற்கு நடிகர் சங்கம் தகுந்த ஒத்துழைப்பு தரும் என்ற நம்புகிறோம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.