''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2ம் பாகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் சமுத்திரகனி. இருவருமே கே.பாலச்சந்தரின் சீடர்கள். இந்தியன் 2வில் நடித்தது குறித்து அவர் கூறியிருப்பதாவது :
கமல்ஹாசன் சாருக்கு நான் பெரிய ரசிகன். நான் ஆபரேட்டராக இருந்தபோது வாழ்வே மாயம் படத்தைத்தான் அதிகமுறை ஓட்டியிருக்கிறேன். அன்பே சிவம், ஹே ராம் படங்கள் மிகவும் பிடிக்கும். இந்தியன் படத்தில் ஒரு சைடு ஆர்ட்டிஸ்டாகவாவது நடிக்க விரும்பி சென்றேன். ஆனால் அன்றைக்கு புறந்தள்ளப்பட்டேன். இதை மனதில் வைத்து எனக்காகவே இந்தியன் 2வில் எனது கேரக்டரை ஷங்கர் சார் எழுதியதாக கேள்விப்பட்டேன்.
கமல் சாரை இயக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் அது இருந்தது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நாவலை அவரை வைத்து இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த நாவலில் வரும் ‛மொக்கை நாயக்கர்' கேரக்டரில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கமல் சார் ஆபீசுக்கு சென்ற அந்த நாவலை கொடுத்துவிட்டு எனது ஆசையையும் சொல்லிவிட்டு வந்தேன். அதன்பிறகு அங்கிருந்து எந்த தகவலும் வராததால் நானும் விட்டுவிட்டேன்.
இவ்வாறு சமுத்திரகனி கூறியுள்ளார்.