அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2ம் பாகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் சமுத்திரகனி. இருவருமே கே.பாலச்சந்தரின் சீடர்கள். இந்தியன் 2வில் நடித்தது குறித்து அவர் கூறியிருப்பதாவது :
கமல்ஹாசன் சாருக்கு நான் பெரிய ரசிகன். நான் ஆபரேட்டராக இருந்தபோது வாழ்வே மாயம் படத்தைத்தான் அதிகமுறை ஓட்டியிருக்கிறேன். அன்பே சிவம், ஹே ராம் படங்கள் மிகவும் பிடிக்கும். இந்தியன் படத்தில் ஒரு சைடு ஆர்ட்டிஸ்டாகவாவது நடிக்க விரும்பி சென்றேன். ஆனால் அன்றைக்கு புறந்தள்ளப்பட்டேன். இதை மனதில் வைத்து எனக்காகவே இந்தியன் 2வில் எனது கேரக்டரை ஷங்கர் சார் எழுதியதாக கேள்விப்பட்டேன்.
கமல் சாரை இயக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் அது இருந்தது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நாவலை அவரை வைத்து இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த நாவலில் வரும் ‛மொக்கை நாயக்கர்' கேரக்டரில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கமல் சார் ஆபீசுக்கு சென்ற அந்த நாவலை கொடுத்துவிட்டு எனது ஆசையையும் சொல்லிவிட்டு வந்தேன். அதன்பிறகு அங்கிருந்து எந்த தகவலும் வராததால் நானும் விட்டுவிட்டேன்.
இவ்வாறு சமுத்திரகனி கூறியுள்ளார்.