ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை |
மயாஜாலங்கள், மந்திர தந்திரங்கள், நம்ப முடியாத காட்சிகளை கொண்ட படங்களை பேண்டசி படங்கள் என்பார்கள். அதனை இன்றைய டிஜிட்டல் உலகத்தோடு இணைத்து சைபர் பேண்டசி படமாக உருவாகி உள்ளது 'அமீகோ'. இதில் சாந்தினி தமிழரசன் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பி.பிரவீண் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சாந்தினியுடன் அர்ஜூன், சோமையா ஜூலா, சுவிதா ராஜேந்திரன், பிரவீன் இளங்கோ, வத்சன் சக்கரவர்த்தி, வெக்கே, மனிஷா ஜஷ்னானி, பிரக்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்தியாவில் தயாராகி இருக்கும் முதல் சைபர் பேண்டஸி ஹாரர் திரில்லர் படம். டிஜிட்டல் உலகின் மறுபக்கத்தை திகிலூட்டும் அம்சங்களுடன் நேர்த்தியாக விவரிக்கிறது. ஆன்லைன் தொடர்பான அத்துமீறலில் சிக்கும் நண்பர்கள் குழுவை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பாரம்பரியமாக இந்திய திகில் படங்கள் பெரும்பாலும் பேய் , ஆவி போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம்பியுள்ளன. ஆனால் 'அமிகோ' இதுவரை யாரும் அறியப்படாத பிரதேசத்திற்குள் நுழைகிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் உலகில் அமைதியற்ற சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. அமீகோ என்றால் நண்பர் என பொருள். இந்தத் திரைப்படம் நண்பர்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளையும், அதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளையும் சுவாரசியமாக வழங்குகிறது என்றார்.