லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் திலகம் சிவாஜியின் நினைவு தினம் நாளை(ஜூலை 21) அனுசரிக்கப்டுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான நிகழ்ச்சியாக முதல் நிகழ்ச்சியாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. பாரத் கலாச்சார், சிவாஜி ரசிகர் மன்றம், அப்பாஸ் கல்சுரல் அமைப்புகள் இணைந்து இதனை நடத்துகின்றன.
நாளை மாலை 6 மணிக்கு தி.நகர் பத்மசேஷாத்திரி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒய்ஜிபி ஆடிட்டோரித்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 'மன்னவன் வந்தானடி' என்ற தலைப்பில் சிவாஜியின் படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு டாக்டர் ராதி சுராஜித் குழுவினர் நடனமாடி சிவாஜிக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.