டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

'இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என அடுத்தடுத்து இரண்டு மாறுபட்ட படங்களைக் கொடுத்து சிறந்த இயக்குனர் எனப் பெயரைப் பெற்றவர் சுதா கொங்கரா. மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 'புறநானூறு' படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பும் வெளியிட்டார்கள். ஆனால், அந்தப் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்தார்கள்.
இருந்தாலும் அந்தப் படத்தை இருவரும் இணைந்து மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதே கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்று கோலிவுட்டில் பேச்சு பரவியது.
இந்நிலையில் அந்த பேச்சு தற்போது உறுதியாக ஒப்பந்தம் வரை போய்விட்டதாகச் சொல்கிறார்கள். புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறதாம். கதையைக் கேட்டு பிடித்துப் போன சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை 'மிஸ்' செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம். அவரது முயற்சியில் ஒரு புதிய தயாரிப்பாளரைப் பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.