மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என அடுத்தடுத்து இரண்டு மாறுபட்ட படங்களைக் கொடுத்து சிறந்த இயக்குனர் எனப் பெயரைப் பெற்றவர் சுதா கொங்கரா. மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 'புறநானூறு' படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பும் வெளியிட்டார்கள். ஆனால், அந்தப் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்தார்கள்.
இருந்தாலும் அந்தப் படத்தை இருவரும் இணைந்து மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதே கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்று கோலிவுட்டில் பேச்சு பரவியது.
இந்நிலையில் அந்த பேச்சு தற்போது உறுதியாக ஒப்பந்தம் வரை போய்விட்டதாகச் சொல்கிறார்கள். புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறதாம். கதையைக் கேட்டு பிடித்துப் போன சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை 'மிஸ்' செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம். அவரது முயற்சியில் ஒரு புதிய தயாரிப்பாளரைப் பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.