மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்த திரிஷா, தற்போது மீண்டும் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் கமலுடன் ‛தக்லைப்', அஜித்துடன் ‛விடாமுயற்சி', சிரஞ்சீவியுடன் ‛விஸ்வாம்பரா', மோகன் லாலுடன் ‛ராம்' என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் திரிஷா.
இந்த நிலையில் தற்போது தமிழில் ‛நேசிப்பாயா' என்ற படத்தை இயக்கி இருக்கும் விஷ்ணுவர்தன், அடுத்து பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் இயக்க உள்ள ‛தி புல்' என்ற படத்திலும் நடிக்க போகிறார் திரிஷா. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் தொடங்க இருக்கும் நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவும் கலந்து கொள்ளவிருக்கிறார்.