சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
இயக்குனர் கே.பாலச்சந்தரின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு பாலச்சந்தர் சிலைக்கு மாலை அணிவித்தார். இவ்விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, இயக்குனர்கள் வஸந்த், சரண், மங்கை அரிராஜன், நடிகர்கள் பூ விலங்கு மோகன், தாசரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா “ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவுக்கு பாலச்சந்தரின் பெயரை சூட்டிய தமிழக அரசுக்கு நன்றி. அந்த தீவில் அவரது முழு உருவ சிலையை வைக்க வேண்டும்” என்றார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: நான் அவரைப் (பாலச்சந்தர்) பற்றி பேசாத நாளே இல்லை. என் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார் என்பதற்காக மட்டும் போற்றப்பட வேண்டியர் அல்ல. தனக்குப் பயனில்லை என்ற நிலையிலும் என்னைப்போல் பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். அந்தளவிற்கு, விடாமுயற்சியாக புதுமைகளையும், புதுமுகங்களையும் அறிமுகப்படுத்திய வேறு இயக்குநர் என் நினைவிற்கு வரவில்லை. என்னைப்போல் பல கலைஞர்களை உருவாக்கி எங்களுடனே இருக்கிறார். இன்று(நேற்று) அவருக்குப் பிறந்த நாள். எங்களுக்கு இத்துறையில் அறிவு வளர்ந்த நாள் எனக் கூறியுள்ளார்.