மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. அந்தப் படத்தில் அரவிந்த்சாமிக்கான சம்பளத்தில் தர வேண்டிய பாக்கித் தொகை 30 லட்சம், வருமான வரித்துறைக்கு தயாரிப்பாளர் செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகை 27 லட்சம், பெற்ற கடன் தொகை 35 லட்ச ரூபாய் ஆகியவற்றைத் தயாரிப்பாளர் அளிக்கவில்லை என அரவிந்த்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தயாரிப்பாளர் முருகன் குமாரைக் கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் வழக்கை ஜுலை 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார். நேற்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் அரவிந்த்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தயாரிப்பாளர் எங்களிடம் தீர்வுக்காக அணுகியுள்ளார். நீங்கள் எங்களுக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும். அதைத் தீர்க்க முடிகிறதா என்று பார்ப்போம்,” என்று நீதிபதியிடம் கேட்டார்.
அவரது கோரிக்கைக்கு சம்மதித்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.