தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன்-2, கேம் சேஞ்சர் மற்றும் ராயன் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்திலும் அவர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், இந்தியன்-2 படத்தின் புரமோஷனில் இருந்த எஸ்.ஜே.சூர்யா அது குறித்து கூறுகையில், குட் பேட் அக்லி படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பது தெரியவரும் என்று ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். மேலும், அஜித் நடித்த வாலி படம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.