இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன்-2, கேம் சேஞ்சர் மற்றும் ராயன் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்திலும் அவர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், இந்தியன்-2 படத்தின் புரமோஷனில் இருந்த எஸ்.ஜே.சூர்யா அது குறித்து கூறுகையில், குட் பேட் அக்லி படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பது தெரியவரும் என்று ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். மேலும், அஜித் நடித்த வாலி படம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.