ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கில் மட்டுமல்ல அவர் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மலையாளத்திலும் அவரது புதிய படங்கள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கிய நகாஸ் ஹிதாயத், துல்கர் சல்மானை வைத்து அவரது நாற்பதாவது படத்தை இயக்குகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபலமான வைஜெயந்தி மூவிஸ் உடன் துல்கர் சல்மானின் வே பாரர் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் எஸ்.ஜே சூர்யா மலையாள திரையுலகில் நுழைகிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சில காரணங்களால் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருக்கிறார் என்றும் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மிஷ்கினுக்கும் மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.