ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்தவர் நடிகை இயக்குனர் மேக்னா ராஜ். பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் காலமானார். இது கன்னட திரை உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜ், ராயன் என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது குழந்தைக்கு நான்கு வயதான நிலையில் சிறுவனை தனது பெற்றோரின் பராமரிப்பில் பாதுகாப்பாக விட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். தனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்த மலையாளத் திரையுலகிற்கே எட்டு வருடம் கழித்து திரும்பி உள்ள மேக்னா ராஜ் தற்போது சுரேஷ் கோபி நடித்து வரும் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். மீண்டும் மலையாள படத்தில் நடிப்பதற்காக செட்டிற்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் தனக்கு அளித்த வரவேற்பை பார்த்ததும் மீண்டும் தாய்வீடு திரும்பியது போன்று உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளார் மேகனா ராஜ்.