என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி 7 வருடங்களுக்கு பின் வானத்தைப் போல என்ற தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் இப்போது காண்பிக்கப்படும் வீட்டில் தான் வாணி ராணி தொடரும் படமாக்கப்பட்டது. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள நீலிமா, 'இதுதான் டிம்பிள் வீடு. நாங்கள் இந்த வீட்டில் சைக்கிள் ஓட்டி விளையாடி இருக்கிறோம். ஒன்றாக சுற்றி திரிந்திருக்கிறோம். இது சூட்டிங் வீடாக இருந்தாலும் இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலுக்கும் என்னுடன் தொடர்புண்டு. தூணில் சாய்ந்திருக்கிறேன். தரையில் அமர்ந்து அழுதிருக்கிறேன். இது போன்ற பல நினைவுகளை எனக்கு இந்த வீடு ரிவைண்டு செய்துள்ளது. இந்த வீட்டை பார்த்ததும் பல ஏக்கமான உணர்வுகள் எனக்குள் வருகிறது' என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.