ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படமான 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நாளை ஜூலை 5 முதல் ஐதராபாத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு சுமார் பத்து நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. அதன்பிறகு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள்.
இந்த 'கூலி' படத்தில் நடிப்பதற்காகவே 'வேட்டையன்' படத்தில் தான் இடம் பெறும் காட்சிகளின் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்கச் சொன்னார் ரஜினிகாந்த். அதன்பின் அபுதாபி, இமயமலை என சில வாரங்கள் ஓய்வில் இருந்தார். பின் 'கூலி' படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிலும் அவர் கலந்து கொண்டார்.
'கூலி' படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாக உள்ளது. இப்படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ரஜினி, சத்யராஜ் இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதிஹாசன், பஹத் பாசில், ஷோபனா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
வரும் வாரங்களில் இப்படத்தின் மேலும் சில அப்டேட்டுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.