நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இன்றைய பல பிரம்மாண்டங்களுக்கு எப்போதோ அஸ்திவாரம் போட்டவர். அவருடைய பிரம்மாண்ட வழியைத்தான் இன்றைய பல தெலுங்கு, ஹிந்தி இயக்குனர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.
தமிழில் 'இந்தியன் 2' படத்தை முடித்துள்ள ஷங்கர் தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி வருகிறார். 'இந்தியன் 2' படம் அடுத்த வாரம் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது. 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் நடைபெற வேண்டி உள்ளதாம். அதை முடித்த பின் பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வரலாம். அடுத்து 'இந்தியன் 3' படமும் வெளியாக உள்ளது.
இந்த படங்களின் வேலைகள் அடுத்த சில மாதங்களில் முடிந்துவிடும். அதற்கடுத்து என்ன மாதிரியான படங்களை இயக்க உள்ளேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சரித்திரக் கதை, ஜேம்ஸ் பான்ட் படம் மாதிரியான கதை, ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை என மூன்று கதைகளை வைத்துள்ளாராம் ஷங்கர். ஆனால், மூன்று படங்களுமே அதிக பொருட்செலவில் எடுக்க வேண்டியுள்ள படம் என்றும் தெரிவித்துள்ளார். அந்தப் படங்களில் அதிக விஎப்எக்ஸ் காட்சிகள், புதிய தொழில்நுட்பம் ஆகியவை இருக்கும் என்று கூறியுள்ளார்.