கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இன்றைய பல பிரம்மாண்டங்களுக்கு எப்போதோ அஸ்திவாரம் போட்டவர். அவருடைய பிரம்மாண்ட வழியைத்தான் இன்றைய பல தெலுங்கு, ஹிந்தி இயக்குனர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.
தமிழில் 'இந்தியன் 2' படத்தை முடித்துள்ள ஷங்கர் தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி வருகிறார். 'இந்தியன் 2' படம் அடுத்த வாரம் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது. 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் நடைபெற வேண்டி உள்ளதாம். அதை முடித்த பின் பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வரலாம். அடுத்து 'இந்தியன் 3' படமும் வெளியாக உள்ளது.
இந்த படங்களின் வேலைகள் அடுத்த சில மாதங்களில் முடிந்துவிடும். அதற்கடுத்து என்ன மாதிரியான படங்களை இயக்க உள்ளேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சரித்திரக் கதை, ஜேம்ஸ் பான்ட் படம் மாதிரியான கதை, ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை என மூன்று கதைகளை வைத்துள்ளாராம் ஷங்கர். ஆனால், மூன்று படங்களுமே அதிக பொருட்செலவில் எடுக்க வேண்டியுள்ள படம் என்றும் தெரிவித்துள்ளார். அந்தப் படங்களில் அதிக விஎப்எக்ஸ் காட்சிகள், புதிய தொழில்நுட்பம் ஆகியவை இருக்கும் என்று கூறியுள்ளார்.