''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
25 வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை ஊர்வசி. அதன் பிறகு காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய ஊர்வசி மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறார். அப்படி அவர் மலையாளத்தில் நடிகை பார்வதியுடன் இணைந்து நடித்துள்ள ‛உள்ளொழுக்கு' என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் படம் முழுக்க சீரியஸான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஊர்வசி. சொல்லப்போனால் நடிப்பில் பார்வதியையே ஊர்வசி ஓவர் டேக் செய்து விட்டார் என்று படம் பார்த்த பலரும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரது காமெடி திறமை பற்றி பேச்சு வந்தபோது, “என்னுடைய நகைச்சுவை காட்சியில் யார் மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். குறிப்பாக உருவ கேலி என்பதை நான் தீவிரமாக எதிர்க்கிறேன். பெரும்பாலும் பல படங்களில் கதாநாயகர்களுடன் கூடவே சுற்றிக்கொண்டு வரும் நபர்கள் இதுபோன்ற காமெடியை தான் பின்பற்றி வருகிறார்கள். நான் ஜட்ஜ் ஆக பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கூட, பங்கேற்கும் போட்டியாளர்கள் உருவ கேலி செய்து காமெடி செய்தால் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களுக்கு ஜீரோ மார்க் தான் வழங்குவேன். அதை ஊக்குவித்தால் தவறான முன்னுதாரணமாக போய்விடும்” என்று கூறியுள்ளார்.