பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
விஜய் சேதுபதியின் 50வது படமான ' மகாராஜா' சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தை 'குரங்கு பொம்மை' புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். ஆனால் படத்தில் அவர் உடற்பயிற்சி ஆசிரியை என்ற சிறிய கேரக்டரிலேயே நடித்திருந்தார். விஜய்சேதுபதி மகளுக்கு அவ்வப்போது உதவும் ஒரு ஆசிரியை என்ற வகையிலேயே அவரது கேரக்டர் அமைந்திருந்தது.
இதுகுறித்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்போது பேசத் தோன்றவில்லை. இந்தக் கதைக்காக என்னைக் கூப்பிட்ட நித்திலனுக்கு நன்றி. என் கதாபாத்திரம் சிறிது பெரிது என்றில்லாமல் இந்த நல்ல கதையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். விஜய் சேதுபதியின் 50வது படமான இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி.
மலையாளத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. என் நடிப்பில் வெளியான சமீபத்திய எந்தப் படங்களுக்கும் இப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனக்கும் படத்திற்கும் நல்ல வரவேற்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.