ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் கடத்தப்படுவதுதான் இப்படத்தின் கதை.
முதல் பாகத்தில் அரசியல் பின்னணி கொண்டவர்கள் அந்தக் கடத்தலில் ஈடுபடுவதைக் காட்டியிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகத்தின் கதையும், கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். அதில் ஒரு கதாபாத்திரம் 'துணை முதல்வர்' கதாபாத்திரம் என்கிறார்கள்.
தற்போது நடந்த ஆட்சி மாற்றத்தில் அல்லு அர்ஜூனின் உறவினரான பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 'புஷ்பா 2' படம் வெளிவந்த பின் வில்லன் கதாபாத்திரம் துணை முதல்வர் என்று இருந்தால் அது சர்ச்சையை ஏற்படுத்துமே என யோசித்திருக்கிறது படக்குழு. அதன் விளைவாக தற்போது கதாபாத்திரத்தை மாற்றுகிறார்களாம். அதனால்தான் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் என புதுத் தகவல் தெரிவிக்கிறது.
ஆந்திரத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அல்லு அர்ஜூன் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனால், அவருக்கும் பவன் கல்யாணுக்கும் இடையே உரசல் என்பதுதான் ஆந்திர சினிமா, அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் ஒரு விஷயம். எனவே, 'புஷ்பா 2' விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறதாம் படக்குழு.