ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் அதிக புகழை பெற்றவர் வீஜே தீபிகா. மீடியாவில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் வீஜேவாக நுழைந்து அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் சீரியல்களில் தோன்றிய அவர், தற்போது தமிழ்நாட்டு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார்.
இந்நிலையில், அவர் நடிக்க வந்த புதிதில் பட்ட அவமானங்களையும் கஷ்டங்களையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், 'நான் திருநெல்வேலியில் இருந்து வந்ததால் அந்த ஊர் பாஷையில் தான் பேச வரும். இதனாலேயே என்னை ரிஜெக்ட் செய்தார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு சந்திரமதி சீரியலில் சிறு ரோல் கிடைத்தது. அதுவும் சில நாட்களுக்கு மட்டும் தான். கொரோனா காலக்கட்டத்தில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது திடீரென லாக்டவுடன் போட்டார்கள். ஊருக்கு போய்விட்டால் நம்முடைய ரோலை மாற்றிவிடுவார்களோ என்று பயந்து சென்னையிலேயே தங்கிவிட்டேன். அதேசமயம் வருமானம் இல்லாமல் கையில் பணம் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். சாப்பிட கூட வழியில்லாமல் நடுத்தெருவில் நின்று அழுதிருக்கிறேன். அதெல்லாம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்கள்' என உருக்கமாக கூறியுள்ளார்.