ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் அதிக புகழை பெற்றவர் வீஜே தீபிகா. மீடியாவில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் வீஜேவாக நுழைந்து அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் சீரியல்களில் தோன்றிய அவர், தற்போது தமிழ்நாட்டு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார்.
இந்நிலையில், அவர் நடிக்க வந்த புதிதில் பட்ட அவமானங்களையும் கஷ்டங்களையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், 'நான் திருநெல்வேலியில் இருந்து வந்ததால் அந்த ஊர் பாஷையில் தான் பேச வரும். இதனாலேயே என்னை ரிஜெக்ட் செய்தார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு சந்திரமதி சீரியலில் சிறு ரோல் கிடைத்தது. அதுவும் சில நாட்களுக்கு மட்டும் தான். கொரோனா காலக்கட்டத்தில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது திடீரென லாக்டவுடன் போட்டார்கள். ஊருக்கு போய்விட்டால் நம்முடைய ரோலை மாற்றிவிடுவார்களோ என்று பயந்து சென்னையிலேயே தங்கிவிட்டேன். அதேசமயம் வருமானம் இல்லாமல் கையில் பணம் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். சாப்பிட கூட வழியில்லாமல் நடுத்தெருவில் நின்று அழுதிருக்கிறேன். அதெல்லாம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்கள்' என உருக்கமாக கூறியுள்ளார்.




