வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் ஆகியோருடன் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்த்த சாதனையைப் புரியாமல் போய்விட்டது.
இந்தப் படத்தின் தமிழக வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடக்காமல் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு மொழியிலும் முக்கிய பிரபலங்களை நடிக்க வைத்தால் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார்கள். தமிழிலிருந்து கமல்ஹாசனை நடிக்க வைத்தார்கள். ஆனால், அவர் நடித்தாலும் தமிழக வினியோகஸ்தர்கள் இப்படத்தைக் கண்டு கொள்ளவில்லையாம்.
அவர்கள் குறிப்பிட்ட விலைக்கு படத்தை யாரும் முன் வரவில்லை என்று தகவல். ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுத்தால் அதிக தியேட்டர்களை போட்டுத் தருவார்கள் என அணுகினார்களாம். அவர்களோ பத்து கோடிக்கு மேல் தரவே முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.
பின்னர் தெலுங்கு தயாரிப்பாளரான திருப்பதி பிரசாத் சுமார் 20 கோடிக்கு தமிழக உரிமையை வாங்கினாராம். அவர் வினியோகர்களிடம் பேசியதில் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கடைசியாக ஒரு யோசனையை அவர்களுக்கு சொல்லியிருக்கிறார் திருப்பதி பிரசாத்.
அதாவது, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தான் தயாரிக்கும் படத்தின் வினியோக உரிமையை 'கல்கி 2898 ஏடி' படத்தை வாங்குபவர்களுக்குத் தருகிறேன் என்றாராம். அதனால் தற்போது படத்தை வாங்க முன் வந்திருக்கிறார்களாம். பிரபாஸ் படத்தை விற்பதற்கே சிவகார்த்திகேயன் தேவைப்படுகிறார் என்பதுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.