வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் சாய் பிரியங்கா ருத். 'கேளடி கண்மணி' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிக்கிறார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மெட்ரோ, கேங்ஸ் ஆப் மெட்ராஸ், இரவின் நிழல் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவர் நடித்துள்ள படம் 'பயமறியா பிரம்மை'. இதில் ஜேடி என்ற புதுமுகத்தின் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 69 எம்எம் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்த ராகுல் கபாலி இயக்கி உள்ளார்.
படத்தில் நடித்திருப்பது குறித்து சாய் பிரியங்கா ருத் கூறியிருப்பதாவது : ஒன்றரை வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாகும் 'பயமறியா பிரம்மை' எனும் படத்தில் நடித்திருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் தளங்களில் வெளியான படங்களில் நடித்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் திரைப்படம் எனக்கு மறக்க இயலாத அனுபவம். இது போன்ற புதிய முயற்சிகளை பல தடைகளை கடந்து போராடி இப்படத்தை வெளியிடுகிறார்கள். இது போன்ற புதிய முயற்சிகளை இந்த படக்குழு தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதிலும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். என்றார்.