மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிசியாக இருக்கிறார் தான்யா ஹோப். கடந்த ஆண்டு அவர் நடித்த கப்சா (கன்னடம்), கிக், லேபிள், குலசாமி ஆகிய 4 படங்கள் வெளிவந்தது. இந்த ஆண்டு ரணம், அறம் தவறேல், வல்லான், கோல்மால் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'வெப்பன்' படம் நாளை வெளிவர இருக்கிறது. இதில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார்.
சத்யராஜ் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் நடித்திருப்பது குறித்து தான்யா ஹோப் கூறியிருப்பதாவது: இயக்குனர் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, முதலில் என் மனதில் வந்தது, நடிகர்கள் சத்யராஜ், ராஜீவ் மேனன், வசந்த் ரவி மற்றும் பல பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிகிறேன் என்பதுதான். இதுவரை நான் நடித்தப் படங்களில் இருந்து இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நான் செய்யாத வித்தியாசமான ஒன்று. என்னுடையது மட்டுமல்ல, படத்தில் நடித்திருந்த எல்லோருடைய கதாபாத்திரங்களுமே வலுவானதாக இருக்கும். நிறைய சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். வில்லன்கள் என்னை கட்டிவைத்து டார்ச்சர் செய்யும் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்தாலும் இப்போது அதை திரையில் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வலிகளுக்கு பின்னால்தான் இனிமை என்பதை என்னால் உணர முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.