சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் ஜுன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படத்திற்கான வியாபாரம் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கு மாநிலங்களின் வியாபாரம் முடிந்துவிட்டதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இப்படத்தின் வினியோக உரிமை சுமார் 150 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். பிரபாஸ் நடித்த படங்களிலேயே இதுதான் அதிகத் தொகை என்கிறார்கள்.
பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவரது படங்கள் அந்த அளவிற்கு வசூலைக் குவிக்கவில்லை. ஆனால், 'கல்கி 2898 ஏடி' படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.