புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் ஜுன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படத்திற்கான வியாபாரம் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கு மாநிலங்களின் வியாபாரம் முடிந்துவிட்டதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இப்படத்தின் வினியோக உரிமை சுமார் 150 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். பிரபாஸ் நடித்த படங்களிலேயே இதுதான் அதிகத் தொகை என்கிறார்கள்.
பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவரது படங்கள் அந்த அளவிற்கு வசூலைக் குவிக்கவில்லை. ஆனால், 'கல்கி 2898 ஏடி' படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.