நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்வக் சென் ஹீரோ. அஞ்சலி, நேஹா ஷெட்டி நாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் என்.டி.பாலகிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது குரூப் போட்டோ எடுப்பதற்காக மேடை ஏறிய பாலகிருஷ்ணா அஞ்சலி, நேகா ஷெட்டி இருவரையும் போட்டோவுக்கு சரியாக நிற்கும்படி கூறி அவரே அவர்களை நிற்க வைத்தார். அஞ்சலி அதனை கவனிக்காமல் தனது சேலையை சரிசெய்து கொண்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த பாலகிருஷ்ணா அஞ்சலியின் தோளை பிடித்து தள்ளினார். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பொது மேடைகளில் இந்த மாதிரி நடந்து கொள்வது என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு புதிதில்லை. இப்போதும் அப்படியே செய்திருக்கிறார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அது சும்மா விளையாட்டுக்கு செய்தது என்று பாலகிருஷ்ணா தரப்பு கூறி வருகிறது.