விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், சமீபத்தில் புதுச்சேரியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கே பழைய கோட்டை சாலையிலும் கடற்கரை சாலையிலும் இந்த படத்தில் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிகளில் கார்கள் பறந்து வெடித்து சிதறுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன. இரவு நேரம் என்பதால் படப்பிடிப்பு நடப்பது பற்றி அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இந்த சத்தம் கேட்டு பதறியடித்து வெளியே வந்து பார்த்தனர்.
கோட் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை அப்போதுதான் தெரிந்துகொண்ட அவர்கள் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்துமாறு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் படக்குழுவினர் அவர்களிடம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றும் இதனால் எந்த விதமான அபாயமும் யாருக்கும் ஏற்படாது என்றும் உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தி, பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினார்களாம்.