எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், சமீபத்தில் புதுச்சேரியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கே பழைய கோட்டை சாலையிலும் கடற்கரை சாலையிலும் இந்த படத்தில் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிகளில் கார்கள் பறந்து வெடித்து சிதறுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன. இரவு நேரம் என்பதால் படப்பிடிப்பு நடப்பது பற்றி அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இந்த சத்தம் கேட்டு பதறியடித்து வெளியே வந்து பார்த்தனர்.
கோட் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை அப்போதுதான் தெரிந்துகொண்ட அவர்கள் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்துமாறு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் படக்குழுவினர் அவர்களிடம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றும் இதனால் எந்த விதமான அபாயமும் யாருக்கும் ஏற்படாது என்றும் உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தி, பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினார்களாம்.