இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அவருடைய நடிப்பு, நடனம் என அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் அவர் பாடும் பாடலுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால் அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலாவது விஜய் பாடி ரசிகர்களை குஷி படுத்துவார். கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா நடித்து வெளிவந்த 'பெரியண்ணா' என்கிற படத்தில் விஜய் மூன்று பாடல்களைக் பாடியிருந்தார். அதன்பின் இப்போது தான் ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடி உள்ளார். அதிலும் தனது படத்தில் அவர் இரண்டு பாடல்கள் பாடியிருப்பது இன்னும் ஒரு தனிச்சிறப்பு.