பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இசையமைப்பாளர் இளையராஜாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் நேற்று சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், தமிழர்களின் பெருமை இசைஞானி இளையராஜாவை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையால், பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்னும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அந்த பாடலில் சகோதரி பவதாரணியின் இசை பங்களிப்பு குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். எங்களை அன்போடு வரவேற்று இசையோடு அவர் வழி அனுப்பி வைத்தார் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதோடு, மறைந்த பவதாரணியின் இசையில் உருவான பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்ற பாடலையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த பாடல் பவதாரணி இசையில், சுகிர் தாரணி பாடல் வரிகளில் உருவாகி இருக்கிறது.