அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செப் வெங்கடேஷ் பட் நீண்ட நாட்களாக நடுவராக இருந்து வந்தார். தற்போது அவர் அந்த சேனலிலிருந்து விலகி வேறொரு தனியார் சேனலில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவர் எதற்காக விஜய் டிவியை விட்டு விலகினார் என்கிற கேள்வியை பலரும் கேட்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட், 'நான் விஜய் டிவியில் தொடர்ந்து 24 வருடங்களாக கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளேன். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. மீடியா மேஷன்ஸ் நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் இடையே நடந்த பிரச்னை காரணமாக அவர்கள் சேனலை விட்டு வெளியேறினர். எனக்கு கம்போர்ட் ஷோன் அவர்கள் தான். அதனால் தான் அவர்களுடன் சேர்ந்து நானும் வெளியே வந்தேன். நான் விஜய் டிவியில் இருந்து விலகவில்லை. எனக்கும் விஜய் டிவிக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை' என்று கூறியுள்ளார்.