நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மெட்ரோ ரயில் பணி அதிகாரியை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான கிராமத்து பின்னணி கொண்ட பாடல்களை பாடி பிரபலமானவர் வேல்முருகன். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இந்த வழியாக வேல்முருகன் காரில் வந்துள்ளார். ஒருவழி பாதையில் அவர் தடுப்புகளை நகற்றி காரை எடுத்து செல்ல முயன்றுள்ளார். அவரை அங்கு பணியில் இருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு தடுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாகவும், ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் தெரிகிறது. வேல்முருகன் தாக்கியதில் காயமடைந்த வடிவேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீஸில் வேல்முருகன் மீது வடிவேலு புகார் அளித்தார். அதன்பேரில் தாக்குதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.