சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பாகங்களான வெளியான பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வரலாற்றுப் படங்கள் மீதான ரசிகர்களின் ஆவலை தூண்டி, இன்று பல வரலாற்று படங்கள் உருவாவதற்கு அடித்தளமிட்ட படம் பாகுபலி என்றால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த நிலையில் பாகுபலி படம் அப்படியே 'பாகுபலி : கிரவுண்ட் ஆப் தி பிளட்' என்கிற பெயரில் அனிமேஷன் சீரிஸ் ஆக வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்த அனிமேஷன் சீரிஸில் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை பார்க்கும்போது பலரும் அது நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி சாயலிலேயே இருப்பதாக கருதினார்கள். இதுகுறித்து இயக்குனர் ராஜமவுலியிடமே கேட்கப்பட்டது. அவரும் கூட பாகுபலி தோனி சாயலில் தான் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டதுடன், ஒருவேளை இதை உருவாக்கியவர்கள் தோனியின் ரசிகர்களாக இருந்திருப்பார்கள் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.