நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பாகங்களான வெளியான பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வரலாற்றுப் படங்கள் மீதான ரசிகர்களின் ஆவலை தூண்டி, இன்று பல வரலாற்று படங்கள் உருவாவதற்கு அடித்தளமிட்ட படம் பாகுபலி என்றால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த நிலையில் பாகுபலி படம் அப்படியே 'பாகுபலி : கிரவுண்ட் ஆப் தி பிளட்' என்கிற பெயரில் அனிமேஷன் சீரிஸ் ஆக வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்த அனிமேஷன் சீரிஸில் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை பார்க்கும்போது பலரும் அது நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி சாயலிலேயே இருப்பதாக கருதினார்கள். இதுகுறித்து இயக்குனர் ராஜமவுலியிடமே கேட்கப்பட்டது. அவரும் கூட பாகுபலி தோனி சாயலில் தான் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டதுடன், ஒருவேளை இதை உருவாக்கியவர்கள் தோனியின் ரசிகர்களாக இருந்திருப்பார்கள் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.