மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பாகங்களான வெளியான பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வரலாற்றுப் படங்கள் மீதான ரசிகர்களின் ஆவலை தூண்டி, இன்று பல வரலாற்று படங்கள் உருவாவதற்கு அடித்தளமிட்ட படம் பாகுபலி என்றால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த நிலையில் பாகுபலி படம் அப்படியே 'பாகுபலி : கிரவுண்ட் ஆப் தி பிளட்' என்கிற பெயரில் அனிமேஷன் சீரிஸ் ஆக வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்த அனிமேஷன் சீரிஸில் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை பார்க்கும்போது பலரும் அது நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி சாயலிலேயே இருப்பதாக கருதினார்கள். இதுகுறித்து இயக்குனர் ராஜமவுலியிடமே கேட்கப்பட்டது. அவரும் கூட பாகுபலி தோனி சாயலில் தான் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டதுடன், ஒருவேளை இதை உருவாக்கியவர்கள் தோனியின் ரசிகர்களாக இருந்திருப்பார்கள் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.