'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு |
சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார் . இந்த நிலையில் நெல்சன் தற்போது புதிதாக பிலாமென்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதாக அறிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது, " நான் எனது 20 வயதில் மீடியா பயணத்தை தொடங்கினேன். இதில் நிறைய வெற்றி, தோல்வியை கடந்து வந்தேன். அந்த சமயத்தில் எனக்கென்று தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இப்போது இது நிறைவேறியுள்ளது. இந்த நிறுவனத்தின் லட்சியம் ரசிகர்களுக்கு நல்ல படங்களை தந்து சந்தோஷப்படுத்துவது. மேலும், இந்நிறுவனத்தின் முதல் பட அறிவிப்பு வருகின்ற மே 3ம் தேதி அன்று வெளியாகும் " என குறிப்பிட்டுள்ளார்.