குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு நடிகர் சங்க நிர்வாகத்தில் நடந்த குழப்பங்கள், தேர்தல்கள், வழக்குகளால் 40 சதகிவித பணியோடு சங்க கட்டிடம் நின்று போனது. முன்பு திட்டமிட்டடதை விட இப்போது கட்டித்தின் பட்ஜெட் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது.
இதனால் நடிகர் சங்கம் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளிடம் நிதி கேட்டு வருகிறது. அதோடு வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி ஆகியோர் கட்டிட நிதியாக தலா ரூ.1 கோடி வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கட்டிட நிதியாக 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்பு நிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து 50 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.