300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தனது அழகாலும், நடிப்பாலும் தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சவுந்தர்யா 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஏப்ரல் 17) இதே மாதிரியான ஒரு தேர்தல் காலத்தில் தீவிர பிரச்சாரம் செய்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், கார்த்திக் ஜோடியாக தமிழில் 'பொன்னுமணி' படத்தில் அறிமுகமானார் சவுந்தர்யா. தொடர்ந்து அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களில் ரஜினிக்கும், காதலா காதலா படத்தில் கமல்ஹாசனுக்கும், தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்களில் விஜயகாந்துக்கும் ஜோடியாக நடித்திருந்தார் . கன்னடம், மலையாளம், தெலுங்கு தனது எல்லைகளை விரிவாக்கினார்.
முன்னணியில் இருந்தபோதே பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருந்த சவுந்தர்யா, தன் சகோதரர் அமர்நாத் உடன் கரீம் நகரில் இருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணித்தார். அப்போது விபத்து ஏற்பட்டது. இதில் சவுந்தர்யா, அமர்நாத், ஹெலிகாப்டரை இயக்கிய விமானி உள்ளிட்ட அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.
அவர் உயிரிழப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தன்னை அறிமுகப்படுத்திய ஆர்.வி.உதயகுமாரிடம் பேசி உள்ளார். இதுகுறித்து ஆர்.வி. உதயகுமார் ஒரு முறை கூறும்போது, திடீரென எனக்கு சவுந்தர்யாவிடமிருந்து போன் வந்தது. அப்போது, சினிமாவில் அவர் நடிக்க வாய்ப்பளித்து உதவியதற்கு நன்றியை தெரிவித்த அவர், இந்த உதவியை காலம் உள்ளவரை நான் மறக்க மாட்டேன் என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். இன்றைக்கு நான் வானத்தில் பறப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்று கூறினார். ஏன் சவுந்தர்யா இப்படி எல்லாம் பேசறே, என்னாச்சு உனக்கு என்றும் அவரிடம் கேட்டேன். இல்ல சார் ஏதோ பேசணும்னு தோணியது அதனால் பேசினேன் என்று கூறி போனை வைத்தார். அடுத்த 2 மணி நேரத்தில் அவர் விபத்தில் இறந்த செய்தி எனக்கு கிடைத்தது. நான் அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.