மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஒரு வாரம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து வாராவாரம் புதிய படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த வாரம் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தேர்தலே வந்தாலும் புதிய படங்கள் வருவதை நிறுத்த வாய்ப்பில்லை என இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளன.
ஏப்ரல் 19ம் தேதியன்று பகல் நேரக் காட்சிகள் கண்டிப்பாக நடைபெறாது. மாலை 6 மணிக்கு மேல் வேண்டுமானால் காட்சிகள் நடைபெறலாம். இருந்தாலும் பரவாயில்லை அன்றைய தினம் வருகிறோம் என 'வல்லவன் வகுத்ததடா' என்ற படம் வெளியாகிறது.
அடுத்து ஏப்ரல் 20ம் தேதி 'பைன்டர், சிறகன்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல், தேர்வுகள், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் என கடந்த ஓரிரு வாரங்களாக தியேட்டர்களுக்கு மக்கள் வரவில்லை. தேர்வுகள் ஏறக்குயை முடிந்துவிட்டன. தேர்தலும் இந்த வாரம் முடிந்துவிடும். ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளன.
இருந்தாலும் வரும் வாரங்களில் பல படங்கள் வர உள்ளதால் நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழ் சினிமா உலகம் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.