விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி. இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காவிட்டாலும் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டியுடன் தலா ஐந்து படங்களில் இணைந்து நடிக்கும் அளவிற்கு அங்கே அவருக்கு மலையாள ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். அந்த வகையில் கடந்த 2018ல் ‛ஒரு குட்டநாடன் பிளாக்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் ராய் லட்சுமி.
இந்த நிலையில் தற்போது ஆறு வருடங்கள் கழித்து ‛டிஎன்ஏ' என்கிற படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரை உலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ராய் லட்சுமி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் ரேச்சல் புன்னூஸ் என்கிற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராய் லட்சுமி.
கடந்த இரண்டு வருடங்களாக லெஜன்ட், போலா ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிச் சென்ற ராய் லட்சுமி இந்த படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக தனது பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கலாம். இதற்கு முன்னதாக 2021ல் கன்னடத்தில் வெளியான ஜான்சி ஐபிஎஸ் என்கிற படத்திலும் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.