சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இன்னும் சிவகார்த்திகேயன் சம்மந்தப்பட்ட 20 சதவீத படப்பிடிப்பு காட்சிகள் மீதமுள்ளதால் அடுத்த மாதத்தில் இதன் மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்ட படக்குழு இப்போது செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.