அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் நடிக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி ஹீரோயின். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
படத்தின் 4வது கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் விஜய். படப்பிடிப்பு இடைவெளியில் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இந்த புகைப்படங்களை விஜய் நற்பணி இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். பிறகு அந்த படத்தை அவர் நீக்கிவிட்டார்.
காவி உடை அணிந்த கோவில் நிர்வாகிகளுடன் இருப்பதை பகிர்ந்து, பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் தனது ஆதரவை மறைமுகமாக தெரிவிப்பது மாதிரியாக விமர்சனம் வந்ததால் அந்த போட்டோவை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர்.