டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் நடிக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி ஹீரோயின். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
படத்தின் 4வது கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் விஜய். படப்பிடிப்பு இடைவெளியில் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இந்த புகைப்படங்களை விஜய் நற்பணி இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். பிறகு அந்த படத்தை அவர் நீக்கிவிட்டார்.
காவி உடை அணிந்த கோவில் நிர்வாகிகளுடன் இருப்பதை பகிர்ந்து, பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் தனது ஆதரவை மறைமுகமாக தெரிவிப்பது மாதிரியாக விமர்சனம் வந்ததால் அந்த போட்டோவை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர்.