சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் |
சில இயக்குனர்களும், சில நடிகர்களும் இணைந்தே பயணிப்பார்கள். அவர்களுக்குள் சினிமா தாண்டி ஒரு நட்பு ஏற்பட்டிருக்கும். இவர்களை ஆஸ்தான இயக்குனர்கள், ஆஸ்தான நடிகர்கள் என்ற குறிப்பிடுவார்கள். ரஜினிக்கு எஸ்.பி.முத்துராமன், கமலுக்கு கே.பாலச்சந்தர். சிவாஜிக்கு திருலோகசந்தர், எம்.ஜி.ஆருக்கு நீலகண்டன், விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமிக்கு, சூர்யாவுக்கு ஹரி இப்படியான பட்டியல் அதிகம்.
அந்த வரிசையில் ஜெய்சங்கரின் ஆஸ்தான இயக்குனர் மதுரை திருமாறன். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த இவர் 1971ம் ஆண்டு 'சூதாட்டம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். 50 படங்களுக்கு மேல் இயக்கி உள்ள இவர் ஜெய்சங்கரை வைத்து மட்டும் 20 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். சொந்தங்கள் வாழ்க, திருடி, மேயர் மீனாட்சி, தாய் வீட்டு சீதனம், இளையராணி ராஜலட்சுமி, ஆகியவை அவற்றில் முக்கியமான படங்கள்.