நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சில இயக்குனர்களும், சில நடிகர்களும் இணைந்தே பயணிப்பார்கள். அவர்களுக்குள் சினிமா தாண்டி ஒரு நட்பு ஏற்பட்டிருக்கும். இவர்களை ஆஸ்தான இயக்குனர்கள், ஆஸ்தான நடிகர்கள் என்ற குறிப்பிடுவார்கள். ரஜினிக்கு எஸ்.பி.முத்துராமன், கமலுக்கு கே.பாலச்சந்தர். சிவாஜிக்கு திருலோகசந்தர், எம்.ஜி.ஆருக்கு நீலகண்டன், விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமிக்கு, சூர்யாவுக்கு ஹரி இப்படியான பட்டியல் அதிகம்.
அந்த வரிசையில் ஜெய்சங்கரின் ஆஸ்தான இயக்குனர் மதுரை திருமாறன். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த இவர் 1971ம் ஆண்டு 'சூதாட்டம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். 50 படங்களுக்கு மேல் இயக்கி உள்ள இவர் ஜெய்சங்கரை வைத்து மட்டும் 20 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். சொந்தங்கள் வாழ்க, திருடி, மேயர் மீனாட்சி, தாய் வீட்டு சீதனம், இளையராணி ராஜலட்சுமி, ஆகியவை அவற்றில் முக்கியமான படங்கள்.