நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பின் விஷால் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ரத்னம். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், ரத்னம் படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஹரி. அதில், நாட்டில் 60 சதவீத பேர் கெட்டவர்கள், 40 சதவீதம் பேர் நல்லவர்கள். கெட்டவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்ற ஒருவன் வீறு கொண்டு எழுகிறான். அவன்தான் ரத்னம். சினிமாவில் மட்டுமே இது போன்ற சூப்பர் ஹீரோக்களை பார்க்க முடியும். நல்லவர்களின் வலியை போக்கும் ஒருவன் தான் ஹீரோவாக உருவாக முடியும். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டரில் தான் ரத்னம் படத்தில் விஷால் நடித்துள்ளார். சாமி, சிங்கம் படங்களை விட இந்த படத்தில் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார் ஹரி.