ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பின் விஷால் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ரத்னம். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், ரத்னம் படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஹரி. அதில், நாட்டில் 60 சதவீத பேர் கெட்டவர்கள், 40 சதவீதம் பேர் நல்லவர்கள். கெட்டவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்ற ஒருவன் வீறு கொண்டு எழுகிறான். அவன்தான் ரத்னம். சினிமாவில் மட்டுமே இது போன்ற சூப்பர் ஹீரோக்களை பார்க்க முடியும். நல்லவர்களின் வலியை போக்கும் ஒருவன் தான் ஹீரோவாக உருவாக முடியும். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டரில் தான் ரத்னம் படத்தில் விஷால் நடித்துள்ளார். சாமி, சிங்கம் படங்களை விட இந்த படத்தில் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார் ஹரி.