மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகர் ரஜினிகாந்தை போலவே அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியும் தீவிரமான ஆன்மீகவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை திருவண்ணாமலையில் தொடங்கியவர் இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் அங்கு தான் நடத்தி முடித்தார். அதோடு, திருவண்ணாமலை, காஞ்சி காமாட்சி அம்மன், காசி உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் தொடர்ந்து ஆன்மீக பயணம் சென்று வந்த ஐஸ்வர்யா ரஜினி, அது குறித்த புகைப்படங்களையும் எனது சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது ஓம் நமச்சிவாயா என்று பேப்பரில் பலமுறை எழுதிய புகைப்படத்தை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதோடு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் இன்னும் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதோடு, ‛மார்ச் மாதம் முழுவதும் பாசிட்டிவ்வாக மட்டுமே பறந்து போனது' என குறிப்பிட்டுள்ளார்.