தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
இயக்குனர் சுந்தர்.சி கடந்த பல வருடங்களாக தமிழில் உள்ளத்தை அள்ளித்தா,அருணாச்சலம், வின்னர், அரண்மனை 1,2 ,3 என குடும்பங்கள் கொண்டாடும் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். தற்போது 'அரண்மனை 4' படத்தை இயக்கியுள்ளார். விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் இப்படத்திற்கு பிறகு ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் சுந்தர்.சி.
அந்த தகவலின் படி, சுந்தர்.சியை அழைத்து ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் கதை ஒன்று கேட்டுள்ளார். அவருக்கு கதை பிடித்து போனதால் சுந்தர்.சியை திரைக்கதை உருவாக்குமாறு கூறியுள்ளாராம். மேலும், இந்த கதை இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதை என்பதால் இதில் மற்றொரு கதாநாயகனாக நடிக்க பாபி டியோல் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.