‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி |
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் கிரன்ச்சிரோல் அனிமே அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
'புஷ்பா' படம் மூலம் ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த நடிகையான ராஷ்மிகாவை அங்குள்ள அவரது ரசிகர்கள் வரவேற்று வாழ்த்தியுள்ளனர். அவரை சந்தித்த புகைப்படங்களையும் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். அவர்களது அன்பிற்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா.
இந்திய நடிகைகளில் ஒரு சிலருக்குத்தான் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். தனக்கும் அங்கு ரசிகர்கள் இருப்பது குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.