ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, தற்போது தனக்கான டப்பிங்கை பேசி வருகிறார். இதை அடுத்து சுதா இயக்கும் தனது 43 வது படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்கப் போகிறார். சூர்யாவுடன் நஸ்ரியா, துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மார்ச் 1ம் தேதி முதல் மதுரையில் தொடங்க உள்ளது. அதன் பிறகு திருச்சி, சிதம்பரம் பகுதிகளில் நடைபெறுவதோடு ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி என்ற பகுதியில் நான்காம்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டு இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவருக்கு நூறாவது படமாகும்.