ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சமீபத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் புளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான போட்டியை மையமாக வைத்து வெளியான இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். படமும் ஓரளவுக்கு வரவேற்பையும், வெற்றியையும் பெற்றுள்ளது. ஆனால் இந்த படத்திற்காக முதலில் கதாநாயகனாக ஜெயக்குமார் அணுகியது நடிகர் கவினைத்தான். ஆனால் கவின் அப்போது வேறு சில படங்களுக்கு தேதியை ஒதுக்கி இருந்ததால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.
அதன்பிறகு தான் இந்த படம் அசோக் செல்வனிடம் சென்றது. அந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் ஒப்பந்தமாகி இருந்தார். ஏற்கனவே கீர்த்தி பாண்டியனுடன் நெருங்கிய நட்பில் இருந்த அசோக் செல்வன் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் தனது காதலையும் கீர்த்தி பாண்டியனிடம் தெரிவித்தார். இந்த படம் வெளி வருவதற்குள் அவர்கள் காதலும் திருமணத்தில் கை கூடியது.