மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சமீபத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் புளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான போட்டியை மையமாக வைத்து வெளியான இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். படமும் ஓரளவுக்கு வரவேற்பையும், வெற்றியையும் பெற்றுள்ளது. ஆனால் இந்த படத்திற்காக முதலில் கதாநாயகனாக ஜெயக்குமார் அணுகியது நடிகர் கவினைத்தான். ஆனால் கவின் அப்போது வேறு சில படங்களுக்கு தேதியை ஒதுக்கி இருந்ததால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.
அதன்பிறகு தான் இந்த படம் அசோக் செல்வனிடம் சென்றது. அந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் ஒப்பந்தமாகி இருந்தார். ஏற்கனவே கீர்த்தி பாண்டியனுடன் நெருங்கிய நட்பில் இருந்த அசோக் செல்வன் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் தனது காதலையும் கீர்த்தி பாண்டியனிடம் தெரிவித்தார். இந்த படம் வெளி வருவதற்குள் அவர்கள் காதலும் திருமணத்தில் கை கூடியது.