இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து தற்போது அங்கேயும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியாகி ரூ.900 கோடி வசூலை தொட்டது. இதனை தொடர்ந்து ராஷ்மிகா தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி விட்டார் என்று மீடியாக்களில் ஒரு செய்தி வெளியானது. அப்படி சோசியல் மீடியாவில் அவர் நான்கு முதல் இருந்து நான்கரை கோடி சம்பளம் கேட்பதாக ஒரு செய்தி வெளியானது.
ஆச்சரியமாக இந்த செய்திக்கு பதில் அளித்துள்ள ராஷ்மிகா, “இதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல நானும் இதை தயாரிப்பாளர்களிடம் இதே அளவில் சம்பளம் கேட்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் என்னிடம் ஏன் என கேட்டால் மீடியாவில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது சார்.. அதனால் அவர்களுடைய வார்த்தைப்படி நான் வாழ வேண்டும் என நினைக்கிறேன்.. நான் என்ன செய்யட்டும் என அவர்களுக்கு பதில் அளிக்க போகிறேன்” என்று நகைச்சுவையாக இந்த செய்தியை அணுகியுள்ளார்.