'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
1980களில் அறிமுகமான முக்கியமான இசை அமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆனந்த். நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம், ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தார். ரஜினி நடிப்பில் 1986ல் வெளியான 'நான் அடிமை இல்லை' படத்தில் இடம்பெற்ற 'ஒரு ஜீவன் தான், உன் பாடல் தான்..' என்ற மனதை உருக்கும் பாடல் இவர் இசை அமைப்பில் உருவானது. தமிழில் வாய்ப்புகள் குறையவே கன்னட படங்களுக்கு இசை அமைத்தார். கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார்.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த விஜய் ஆனந்த் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு பெருங்களத்தூரில் நடந்தது.