உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா |
நடிகர் விஜய் தான் அரசியலில் நுழைவதாக அறிவித்து தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சி பெயரையும் சமீபத்தில் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு திரை உலகில் இருந்து எதிர்பார்த்த பல நபர்களிடமிருந்து எந்த விதமான வரவேற்பு மற்றும் எதிர்ப்பு ரியாக்சன் என எதுவும் வெளிப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் கூட விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசுவது துவங்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், விஜய் மேடையில் நின்று தனது ஆட்கள் மூலமாக வெறும் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் பத்தாது களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும் என்று சில விமர்சனங்களை முன் வைத்தார்.
அதன்பிறகு பேசிய இயக்குனர் பேரரசு, விஜய்க்கு ஆதரவாக தனது கருத்துக்களை கூறினார். குறிப்பாக ‛‛இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் எப்போதும் விஜய்யின் விசுவாசி தான்'' என பொது மேடையிலேயே ஓப்பனாக பேசினார் பேரரசு.
இத்தனைக்கும் அவர் பா.ஜ., கட்சியில் பொறுப்பில் இருந்தாலும் தன்னை திரையுலகில் ‛திருப்பாச்சி' படம் மூலம் அறிமுகப்படுத்தி மீண்டும் ‛சிவகாசி' என்கிற இன்னொரு பட வாய்ப்பையும் தனக்கு கொடுத்ததற்காக நன்றி உணர்வுடன் தனது விசுவாசத்தை பேரரசு வெளிப்படுத்தியுள்ளார் என்றே தெரிகிறது.