ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
கமல்ஹாசனின் பேச்சும், செயலும் சில நேரங்களில் புரியாத புதிராக இருக்கும் என்பார்கள். தற்போது அவர் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றும் புரியாத புதிராக இருக்கிறது.
அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் எதிரெதிரே நின்று கொண்டிருக்கிறார்கள். கருப்பு, வெள்ளையில் இந்த படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள பதிவில் ”இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு... இதுவே சூழ்நிலை ... இதுவே மாயை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளாரா ..? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா..? போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.