சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
மலையாள நடிகையான நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் இப்போது மீண்டும் நடித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ஒரு புதிய வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கும் இந்த வெப் தொடரை சூர்யா பிரதாப் இயக்குகிறார். சென்னையில் நடந்த கொலை குறித்து உருவாகியுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இப்போது இதன் மொத்த படப்பிடிப்பை 100 நாட்களில் நஸ்ரியா நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த வெப் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.