கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாள நடிகையான நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் இப்போது மீண்டும் நடித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ஒரு புதிய வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கும் இந்த வெப் தொடரை சூர்யா பிரதாப் இயக்குகிறார். சென்னையில் நடந்த கொலை குறித்து உருவாகியுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இப்போது இதன் மொத்த படப்பிடிப்பை 100 நாட்களில் நஸ்ரியா நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த வெப் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.