ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

‛சட்டமும் நீதியும்' என்ற வெப்சீரிஸில் கதை நாயகனாக நடித்து இருக்கிறார் ‛பருத்திவீரன்' சரவணன். அதில் பாதிக்கப்பட்ட, அதாவது ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து இறக்கும் ஒருவருக்கு நீதி வாங்கி தருகிற வக்கீல் கேரக்டரில் நடித்து இருக்கிறார். பாலாஜி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.
இந்த கேரக்டர் குறித்து சரவணன் பேசுகையில் ''நான் டிராபிக் ராமசாமி மாதிரி நீதிக்காக போராடுகிற கேரக்டரில் நடித்து இருப்பதாக பலர் பாராட்டுகிறார்கள். நிஜ டிராபிக் ராமசாமியுடன் எனக்கு பழக்கம் உண்டு. அவர் செய்த சாதனைகள் அதிகம். இந்த வெப்சீரிஸில் நீதி கிடைப்பதாக கதை முடிகிறது. ஆனால், நிஜத்தில் வேறு மாதிரி. நானே சில வழக்கு போட்டு இருக்கிறேன். இன்னமும் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். நமக்கு நீதி கிடைக்கும், ஆனால் சற்றே தாமதமாக கிடைக்கும். நம் நாட்டில் போடப்படுகிற வழக்குகள் அதிகம். நீதிமன்றம் குறைவு. எனவே, அதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். நல்ல கேரக்டர் கொடுத்து, நல்ல கதையை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. 15 நாட்களுக்குள் இந்த வெப்சீரிஸை நடித்து கொடுத்தோம்'' என்றார்.