ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

‛சட்டமும் நீதியும்' என்ற வெப்சீரிஸில் கதை நாயகனாக நடித்து இருக்கிறார் ‛பருத்திவீரன்' சரவணன். அதில் பாதிக்கப்பட்ட, அதாவது ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து இறக்கும் ஒருவருக்கு நீதி வாங்கி தருகிற வக்கீல் கேரக்டரில் நடித்து இருக்கிறார். பாலாஜி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.
இந்த கேரக்டர் குறித்து சரவணன் பேசுகையில் ''நான் டிராபிக் ராமசாமி மாதிரி நீதிக்காக போராடுகிற கேரக்டரில் நடித்து இருப்பதாக பலர் பாராட்டுகிறார்கள். நிஜ டிராபிக் ராமசாமியுடன் எனக்கு பழக்கம் உண்டு. அவர் செய்த சாதனைகள் அதிகம். இந்த வெப்சீரிஸில் நீதி கிடைப்பதாக கதை முடிகிறது. ஆனால், நிஜத்தில் வேறு மாதிரி. நானே சில வழக்கு போட்டு இருக்கிறேன். இன்னமும் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். நமக்கு நீதி கிடைக்கும், ஆனால் சற்றே தாமதமாக கிடைக்கும். நம் நாட்டில் போடப்படுகிற வழக்குகள் அதிகம். நீதிமன்றம் குறைவு. எனவே, அதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். நல்ல கேரக்டர் கொடுத்து, நல்ல கதையை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. 15 நாட்களுக்குள் இந்த வெப்சீரிஸை நடித்து கொடுத்தோம்'' என்றார்.