ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண் விருது அறிவித்து மத்திய அரசு கவுரவப்படுத்தி உள்ளது. அவருக்கு இந்தியத் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
கன்னட நடிகரும், 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவருமான சிவராஜ்குமார் நேற்று ஐதராபாத்திற்குச் சென்று சிரஞ்சீவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது குறித்து சிரஞ்சீவி, “என்னை வாழ்த்துவதற்காக பெங்களூருவிலிருந்து வந்த சிவராஜ்குமார் என் மனதைத் தொட்டுவிட்டார். அவருடன் மதிய உணவு அருந்தி, எங்களது தொடர்புகளை நினைவுபடுத்தி சில மணிநேரம் செலவிட்டோம். அவருடைய அப்பா சாதனையாளர் ராஜ்குமார் அவர்கள் குறித்தும், அவர்களது மொத்த குடும்பம் குறித்தும் பல மறக்க முடியாத பாசமான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.