அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண் விருது அறிவித்து மத்திய அரசு கவுரவப்படுத்தி உள்ளது. அவருக்கு இந்தியத் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
கன்னட நடிகரும், 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவருமான சிவராஜ்குமார் நேற்று ஐதராபாத்திற்குச் சென்று சிரஞ்சீவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது குறித்து சிரஞ்சீவி, “என்னை வாழ்த்துவதற்காக பெங்களூருவிலிருந்து வந்த சிவராஜ்குமார் என் மனதைத் தொட்டுவிட்டார். அவருடன் மதிய உணவு அருந்தி, எங்களது தொடர்புகளை நினைவுபடுத்தி சில மணிநேரம் செலவிட்டோம். அவருடைய அப்பா சாதனையாளர் ராஜ்குமார் அவர்கள் குறித்தும், அவர்களது மொத்த குடும்பம் குறித்தும் பல மறக்க முடியாத பாசமான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.